Lyrics
எப்படி நீ தப்பிடுவாய் இறுதி காலத்தில்
மரண தூதன் சிங்கம் போல சீறி வருகிறான்
1. எத்தனை நாள் இருப்பாயென்று
உனக்கு தெரியுமா – எந்த நேரமோ
எந்த வேளையோ – மரணம்
வருவதறியமாட்டாய் மதியின் நுட்பத்தால்
2. வாலிப வயது மங்கை பருவ வயதிலோ
நடு வயதிலோ நல்ல பெலத்திலோ
மரணம் வருவதறியமாட்டாய்
மதியின் நுட்பத்தால்
3. நடு வயதில் நல்ல கல்வி முடிக்கும் வேளையில்
களிப்பின் நேரத்தில் கலியாண நேரத்தில்
மரணம் வருவதறியமாட்டாய்
மதியின் நுட்பத்தால்
4.மரித்தால் எங்கும் போவாயென்று
உனக்கு தெரியுமா – மனித சிருஷ்டியில்
மகிழும் ஆத்துமா இரட்சிப்பை பெற
கர்த்தர் இயேசு மரித்துயிர்ப்பித்தாரே
5. பாவத்தின் பலன் நரகம் சம்பளம் மரணம்
பாவ நெஞ்சேமே நீ பதறமாட்டாயோ – மரித்த
பின்பு மனதிரும்பும் செயலிருக்காது
6. இன்று பாவி உன்னை இயேசு
வருந்தி அழைக்கிறார் – விரும்பி
வாராயோ நெருங்கி சேராயோ – வருந்தி
அழைக்கும் இயேசு முகம் திரும்பி பாராயோ
Details
- Numeric ID
- 4142
- Song ID
- eppadi-nee-thappiduvaai-iruthi-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0