Lyrics
எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ
எது என் சீயோனோ அதின்னம் எத்தனை தொலையோ
என் யேசுநாதர் என் ஆத்தும மீட்பர்
என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை
தூதர்கள் கூடிச் சோபனம் பாடி
நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை
ஜீவ கிரீடம் திவ்விய வாழ்வு
பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குமுண்டாமே
துன்பங்கள் மாறும் சுகம் வந்து சேரும்
இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும்
உலகத்தின் கவலை ஒன்றும் செய்யாதே
பலவிதத் தொல்லை இராது அங்கே பாக்கியம் கொள்வேன்
கைகளில் எடுத்தென் கண்ணீரைத் துடைப்பார்
ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன்
Details
- Numeric ID
- 6016
- Song ID
- eppo-kaanpeno
- Views
- 1
- Downloads
- 1