Eraalamaai Nandri Solli Aaradhikka ஏராளமாய் நன்றி சொல்லி
ஏராளமாய் நன்றி சொல்லி
Lyrics
ஏராளமாய் நன்றி சொல்லி ஆராதிக்க
உம் சமூகம் தேடி வந்தோம்
ஏற்ற வேளை எல்லாம் செய்த அற்புதத்தை
நாங்கள் எண்ணி எண்ணி துதிப்போம்...
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் களிகூர்ந்து ஆராதிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் நிறைந்து ஆராதிப்போம்
1.பஞ்சத்தின் காலத்தில்
காகங்கள் அனுப்பி போஷித்தீரே
எலியாவின் தேவன் நீரே
எங்களை நடத்தினீரே
தேவைகள் சந்தித்தீரே..
2.வியாதியின் நாட்களில்
வார்த்தைகள் அனுப்பி குணமாக்கினீh;
யேகோவா ராஃபா நீரே
அற்புத சுகம் தந்தீரே
கட்டுகள் அவிழ்ந்ததே..
3.திக்கற்ற வேளையில்
தீமையை நன்மையாய் மாற்றினீரே
திறந்த வாசல் வைத்தீர்
தாழ்வில் நினைவு கூர்ந்தீர்
தவறாமல் நன்மை செய்தீர்..
ஆவியில் பெலன் கொண்டு
ஆவியில் களிகூர்ந்து
ஆவியில் நிறைந்து ஆராதிப்போம்
4.சோதனை வேளையில்
தப்பிக்கும் வழியை காட்டினீரே
சாதனை செய்திடவே
சாத்தானை வீழ்த்திடவே
உருவாக்கி உயர்த்தினீரே
Details
- Numeric ID
- 2901
- Song ID
- eraalamaai-nandri-solli-aaradhikka-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1