Erusalaemae Kartharai Sthothiri எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி
எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி
Unknown
Lyrics
Lyrics
எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி
சீயோனே உன் தேவனைத் துதி -2
துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது
1. துதிகளிலே வாசம் செய்யும் இயேசு பெரியவர்
துதிப்பதினால் எரிகோ கோட்டை இடிந்து விழுமே
சத்துருவை மேற்கொள்ளும் துதியின் வல்லமை
சாத்தானை ஓட வைக்கும் துதியின் ஆயுதம்
2. துதிப்பதினால் பயமெல்லாம் பறந்துபோகுமே
துதிக்கின்ற உள்ளமெல்லாம் ஜெயங்கொள்ளுமே
துதியுடனே வாசல் முன்னே சென்றிடுங்கள்
துதியினால் மகிமையினை கண்டிடுங்கள்
3. துதியுடனே கர்த்தரைப் பாடி மகிழ்ந்திடு சுர
மண்டலத்தோடு கீர்த்தனம் சொல்லி புகழ்ந்திடு
வார்த்தையினால் வானம் பூமி
படைத்த தேவனை வாழுகின்ற
நாளெல்லாம் போற்றி துதித்திடு
4. துதி நிறைந்த உள்ளம் மகிழ்ந்து பாடுமே
துதிக்கின்ற குடும்பம் செழித்து வாழுமே
துதி நிறைந்த ஆராதனை ஆசீர்வாதமே
துதியுள்ள சபைகள் வளர்ந்து பெருகுமே
Details
- Numeric ID
- 1604
- Song ID
- erusalaemae-kartharai-sthothiri-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0