Lyrics
எத்தனை இன்பமது இயேசுவின் பாதமது
என்னை விட்டு எடுபடாத பங்கு அது
எந்நாளும் என்னுடைய வாஞ்சை அது
1. கண்ணீரைத் துடைக்கின்ற இடமது
என் கவலைகள் மறக்கின்ற இடமது
கனவுகள் நனவாகும் இடமது
என்னை கனவானாய் மாற்றுகின்ற இடமது
அந்த இடத்தை நான் ஒவ்வொரு நாளும்
தேடிச் செல்கிறேன் - என் நேசரை நான்
அனுதினமும் காணச் செல்கிறேன்
2.நெருக்கங்கள் நீங்குகின்ற இடமது-என்னை
நொறுக்கி உருவாக்கும் இடமது
தரிசனம் கிடைக்கின்ற இடமது
என் தடைகளெல்லாம் நீங்குகின்ற இடமது
3.பெலவீனம் நீங்குகின்ற இடமது-என்னை
பெலவானாய் மாற்றுகின்ற இடமது
நம்பிக்கை பிறக்கின்ற இடமது
நான் நம்பியதை பெற வைக்கும் இடமது
Details
- Numeric ID
- 1639
- Song ID
- ethanai-nammai-yesuvin-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0