Lyrics
எத்தனையோ பெருந்தேவர்களில்
தன்னிகரில்லா மானிடனாய்
பிள்ளையின் வடிவில் கண்ணுறங்கும்
தேவனுக்கு என்றும் நானடிமை
1. அன்றொரு நாள் செய்த பாவத்தினால்
இன்றும் இவ்வையகம் துன்புறுதே -2
நிந்தைகள் ஆயிரம் நெஞ்சத்தில் தாங்கி (2)
இந்நிலை மாற்றிட தேவன் வந்தார் (2)
2. சித்திரமோ இல்லை செந்தளிரோ
நித்திரை கொண்டிடும் என் இறைவன்
அற்புதமாகிடும் அவர் அழகாலே
வெண்ணிலவும் ஒளி மங்கிடுமே
Details
- Numeric ID
- 1636
- Song ID
- ethanaiyo-perum-devargalil-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0