Lyrics
இது விதைக்கின்ற காலமல்லவா
நாம் செயலாற்றும் நேரமல்லவா
உறங்காமல் நாமும் விரைந்தோடி இங்கும்
சுவிசேஷ விதை தூவுவோம்
1. ராக்காலம் வருகின்றதே – அதன்
சாயல் தெரிகின்றதே
ஒளியுள்ள காலம் முடிவாகுமுன்னே
உன் சேவை நிறைவேற்றிடு
2. திறப்பின் ஓர் வாசல் எங்கே
அதில் நிற்கும் மனிதன் எங்கே
கர்த்தரின் கண்கள் பூலோகமெங்கும்
அதை தேடி அலைகின்றதே
3. பின் மாரி பொழிகின்றதே
உன் வேலை வருகின்றதே
அழிகின்ற கூட்டம் உன்னைத்தான் இன்று
எதிர் நோக்கி நிற்கின்றதே
Details
- Numeric ID
- 4524
- Song ID
- ethu-vithaikkindra-kaalamalla-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0