Lyrics
பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்
கைத்தாள ஓசையோடு பாடிடுவேன்
பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்
சங்கீத ராகத்தோடு பாடிடுவேன்
உமக்காக என்றும் பாடிடுவேன்
உயிர் உள்ளவரை பாடிடுவேன்
இதயமே பாடு உணர்ந்து பாடு
உதடே பாடு உயர்த்தி பாடு
இயேசுவை பார்க்கும் வரை
இயேசுவை ரசிக்கும் வரை – 2
சேற்றில் கிடந்தேன் நாற்றமானேன்
சிலுவை சுமந்ததால் வாசனையானேன்
சேற்றில் கிடந்தேன் நாற்றமானேன்
உம் இரத்தத்தாலே வாசனையானேன்
பாவத்தை மன்னித்தீர் பரிசுத்தமாக்கினீர்
சாபத்தை மறந்து விட்டீர் பிள்ளையாய் மாற்றினீர்
ஊழியம் செய்ய வைத்தீர்
சீஷனாய் மாற்றிவிட்டீர்
உம்மை பாடாமல் இருக்கவே முடியாது
உம்மை துதிக்காமல் வாழவே முடியாது
உம்மை விட்டு… விலக நினைத்தேன்
உம் சத்தம் கேட்டு ஓடி ஒளிந்தேன்-2
கூடவே நீர் இருந்தீர் வார்த்தையை அறிய வைத்தீர் – 2
உம் சித்தம் செய்து விட்டீர் எழுப்புதல் பார்க்க வைத்தீர்
Details
- Numeric ID
- 449
- Song ID
- idhayamae-paadu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0