Lyrics
இதோ மனுஷரின் மத்தியில்
தேவாதி தேவனே வாசம் செய்கிறாரே
தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே
தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே
மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசலுள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே
சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடும் இச்சுவிசேஷம் தனை
கூறி உயர்த்திடுவோம் உன்னையே
முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே
வாசம் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்
Details
- Numeric ID
- 60
- Song ID
- idho-manidhargal-mathiyil-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1