Lyrics
இது தெரியாதா? நீ கேட்டதில்லையா?
பூமி முழுவதும் படைத்த தெய்வம் களைப்படைவதில்லை
ஆராய்ந்து முடியா அறிவு உள்ளவர் சோர்ந்து போவதில்லை
1. இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்
வாலிபர்கள் தடுமாரி விழுந்து போவார்கள்
கர்த்தரை நம்பும் மனிதரிடம்
ஆற்றலும் சக்தியும் பெருகிடுதே
கர்த்தரை நம்பும் மனிதரிடம்
ஆற்றலும் சக்தியும் பெருகிடுதே
2. கர்த்தருக்கு காத்திருப்போர் புது பெலன் பெருவார்கள்
கழுகு போல சிறகடித்து உயர, உயர பரப்பார்கள்
ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார்
3. சோர்வுற்ற நேரங்களில் பெலன் கொடுத்து மகிழிந்திடுவார்
வலிமை இல்ல சமயங்களில் வல்லமை பெருக செய்கின்றார்
இரவும் பகலும் காக்கின்றார் எந்நேரமும் காக்கின்றார்
Details
- Numeric ID
- 356
- Song ID
- idhu-thaeriyaadha-nee-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0