Immanuvelin Rathathal Niraintha OotrundeLyrics Song பாமாலை: 331 இம்மானுவேலின் இரத்தத்தால்

பாமாலை: 331 இம்மானுவேலின் இரத்தத்தால்

Lyrics

1. இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே எப்பாவத் தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே நான் நம்புவேன் ! நான் நம்புவேன் ! இயேசு எனக்காய் மரித்தார் – மரித்தார் பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார் தேவனைத் துதியுங்கள் 2. மா பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான் மன்னிப்பும் மோட்சானந்தமும் அடைந்து பூரித்தான் 3. அவ்வாறே நானும் யேசுவால் விமோசனம் பெற்றேன் என் பாவம் நீங்கிப் போனதால் ஓயாமல் பாடுவேன் 4. காயத்தில் ஓடும் ரத்தத்தை விஸ்வாசத்தால் கண்டேன் ஒப்பற்ற மீட்பர் நேசத்தை எங்கும் பிரஸ்தாபிப்பேன் 5. பின் விண்ணில் வல்ல நாதரை நான் கண்டு பூரிப்பேன் அங்கென்னை மீட்ட நேசத்தைக் கொண்டாடிப் போற்றுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5175
Song ID
immanuvelin-rathathal-niraintha-ootrundelyrics-song-chords-ppt
Views
0
Downloads
0