Lyrics
இந்தக் காலத்தில் நீ மெளனம் கொள்ளாதே
இந்தக் காலத்தில் நீ மறைந்து கொள்ளாதே
உனது காலமிது ஒளிவீசும் நேரமிது
அரண்மனை வாழ்வு போதுமென்று
அமைதி கொள்ளாதே
அழிந்திடுவோரின் கதறலை உந்தன்
செவிகள் கேட்டிடட்டும்
ராஜமேன்மை கிடைக்கப் பெற்றாய்
இயேசு ராஜாவின் ஊழியம் செய்திடவே
தேவைகள் நிறைந்தோர் திரளாய் உன்னை
சூழ்ந்து நிற்கின்றனர்
சிலுவையின் அன்பை அறிந்திடாமல்
மடிந்து போகின்றனர்
யாரை அனுப்புவேன் என்றவரின்
கதறலை உன் உள்ளம் கேட்டிடாதோ
தடைகளைக் கண்டு தயங்கிநின்று
தளர்ந்து போகாதே
வஞ்சகன் செய்த சதிகளைக் கண்டு
பயந்து போகாதே
உலகத்தை ஜெயித்தவர் உன்னுடனே
யாவையும் செய்வார் உனக்காகவே
Details
- Numeric ID
- 497
- Song ID
- indha-kaalathil-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1