Lyrics
இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே
ஜீவனீந்தீரல்லோ அன்பினால்
திவ்ய வாக்குத்தத்தம் தந்தெம்மை ஸ்திரப்படுத்தி
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
இயேசுவே என்னை நீர் ஆசீர்வதியும்
சௌக்யமீந்திடும் நான் நம்பி வந்தேனே
அன்பினால் சகேயுவை அழைத்துமே
அன்று இரட்சிப்பளித்திட்டீரே
இன்று யான் பெறவே உம் மாறிடா சந்தோஷமே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
ரோகிகளின் ஏற்ற நல்ல வைத்தியரே
தேகமதில் காயமேற்றீரே
என்னை சுகமாக்க நின் வன் கரத்தை நீட்டியே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
வாவென்று அழைத்த வல்ல சத்தமே
லாசரை உயிர்ப்பித்ததுவே
என்னை உயிர்ப்பிக்க அவ்வல்ல வாக்குரைத்துமே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
யாவுமெனக்காய் முடித்த இயேசுவே
யாருண்டு இப்பாரில் உம்மைப்போல்
உம் மகிமை சாயல் இம்மண் சரீரம் பெற்றிட
நின் கிருபையாலே பூரணனாக்கிடும்
Details
- Numeric ID
- 139
- Song ID
- indrum-endrum-maaridaatha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0