Lyrics
இன்னிய முகமலர்ந்து இருதயத் துருகுமன்பால்
உன்னத தேவ மைந்தன் உலகின்பாற் கருணை கூர்ந்து
மன்னிப்பீர் என்பிதாவே மதலைகளிவர்கள் குற்றம்
மன்னிப்பீர் என்றுருகு மனுவுக்கே ஆமென் என்பீர்
பதிலுக்குப் பதில் செயென்ற பழைய ப்ரமாண மாற்றிப்
புதியதங் கற்பனையைப் புவியதில் நாட்ட வந்த கதி
தருங் மூர்த்தி கருணையுற் றுருகித் தம்மை
வதைத்திடும் யூதர்கட்காய் வருந்தியே ஜெபித்து நின்றார்
விற்றதும் வீணன் நானே வெறுத்ததும் வீணன் நானே
செற்றதும் சேவகன் நானே அறைந்ததும் அடிமை நானே
குத்தின கோரன் நானே கொலைபுரிந்த வனும் நானே
இத்தனை பாவஞ்செய்தேன் இரங்கியாட் கொள்ளுமையா
மன்னிப்பீர் எந்தன் பாவம் மைந்தர்தம் சிலுவைநோக்கி
மன்னிப்பீர் எந்தன் பாவம் மைந்தர் ஐங் காயநோக்கி
மன்னிப்பீர் எந்தன் பாவம், மரிக்கும் தம்மைந்தர் நோக்கி
மன்னிப்பீர் எந்தன் பாவம் மன்னிப்பீர் ஆமென் ஆமென்
Details
- Numeric ID
- 6046
- Song ID
- inniya-mugamalarnthu-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 1
- Downloads
- 1