Lyrics
இரட்சணியமும் வல்லமையும் மகிமையும்
சத்தியமும் கேடகமும் பரிசையும்-2
தேவாதி தேவனுக்கே உரியது
ராஜாதி ராஜனுக்கே உரியது -2
பாடுவோம் அவரின் மகிமைக்காக
ஆராதிப்போம் அவர் கிருபைக்காக -2
1- வெண்ணங்கி தரித்து குருத்தோலை பிடித்து
ராஜாதி ராஜாவை ஆராதிப்போம்
உன்னதமானவரை ஆர்ப்பரிப்போம்
இரட்சிப்பின் அதிபதியை ஆராதிப்போம்
2.தூதர்கள், மூப்பர்கள், ஜீவன்களும்
எண்ணிலடங்கா சேனையோடும்
கன்மலையானவரை உயர்த்திடுவோம்
கர்த்தாதி கர்த்தரை துதித்திடுவோம்
3. நாவுகள் யாவும் உம்மை அறிக்கை செய்யும்
முழுங்கால் யாவும் முடங்கிடுமே
பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்போம்
பரிசுத்த தேவனை ஆராதிப்போம்
Details
- Numeric ID
- 1720
- Song ID
- iradsanyam-vallamai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0