Lyrics
இயேசுவே நீரே என் புகலிடம் நீரே என் அரண் இறைவா
உம்மை நான் நம்பியுள்ளேன்
1. தம் சிறகுகளால் உன்னை மூடிக்காப்பார்
அவருடைய இறக்கைகளுக்கடியிலே நீ அடைக்கலம் புகுவாய்
தவறாத அவருடைய வார்த்தை
உனக்குக் கேடயமும் கவசமும் போல் இருக்கும்
2. தீமை உன்னை அணுகாது
துன்பம் உன் உறைவிடத்தை நெருங்காது ஏனெனில்
நீ செல்லும் இடங்களில் எல்லாம் உன்னைக் காக்கும்படி
தம் தூதருக்கு உன்னைக் குறித்து கட்டளையிட்டார்
3. அவன் என்னையே சார்ந்திருப்பதால் அவனை விடுவிப்பேன்
என் பெயரை அறிந்ததால் அவனைக் காப்பாற்றுவேன்
என்னை நோக்கி கூப்பிடுவான் அவன் செபத்தைக் கேட்பேன்
துன்ப வேளையில் அவனோடு இருப்பேன்
அவனைத் தப்புவித்து பெருமைப்படுத்துவேன்
Details
- Numeric ID
- 155
- Song ID
- iraiva-nee-en-pugalidam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0