Lyrics
இறுதி இராப்போஜன விருந்திலே
இரட்சகர் வீற்றிருந்தார்
இயேசு பன்னிரு சீஷருடன்
1. அப்பமதை எடுத்தவர்
ஆசீர்வதித்ததை பிட்டுத் தந்தார்
எந்தன் சரீரம் இதுவே புசிப்பீர்
என்றே பரிமாறினார்
2. பாத்திரத்தில் நவரசம்
பாவத்தைக் கழுவின தூய இரத்தம்
இரட்சண்ய புது உடன்படிக்கையை
இதைப் பானம் பண்ணினர்
3.அரையிலே சீலை கட்டி
அன்பரின் பாதங்கள் கழுவினார்
மாதிரியாகக் காண்பித்த தியாகம்
மாறாமல் பின் பற்றுவோம்
4. மூழ்கினவன் பாதங்களை
மீண்டுமாய் கழுவியே சுத்தஞ்செய்தார்
ஆயத்தமில்லா அவிசுவாசிகள்
அன்பின் விருந்தில் இல்லை
5. அன்பின் சீஷன் ஆறுதலாய்
அண்ணலின் மார்பினில் சாய்ந்திருந்தான்
துரோகியாம் யூதா துணிக்கையும் வாங்கி
தீவிரம் போய் மறைந்தான்
6. சரீரமாம் சபையிலே
சத்திய ஆவியால் இணைத்தாரே
நன்றியும் பொங்க நிலைத்து நின்றாலோ
நற்கருணை ஈகுவார்
7. கபடமற்ற மனதுடன்
கிறிஸ்துவின் மன்னிக்கும் சிந்தையுடன்
சந்தோஷமாக சமாதானமாக
பந்தியில் பங்கடைவோம்
8. பக்தரோடே சீயோனிலும்
பிதாவின் இராஜ்ஜிய பந்தியிலும்
வாஞ்சையாய் நாமும் வருகையில்
விரைந்து சேர்ந்து கொள்வோம்
Details
- Numeric ID
- 160
- Song ID
- irudhi-irapojana-virunthila-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0