Ithuvarai Seitha Seyalkalukaaka இதுவரை செய்த செயல்களுக்காக
இதுவரை செய்த செயல்களுக்காக
Lyrics
இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே
உம்மைக் பாட வந்தேன்
இம்மட்டும் காத்தவரே இம் மானுவேலே
ஏழு ஸ்வரங்களில் பாடுகின்றேன்
இசையால் மகிமைப் படுத்துகின்றேன்
இரண்டு மூன்று பேர்கள் நடுவில்
இருப்பேன் – என்று சொன்னவரே
நீர் உரைத்த உந்தன் வாக்கின் படியே
எனக்கொரு வரம் தரவே வந்திடுவீர்
என்னில் நன்மை இல்லாதிருந்தும்
ஏனோ என்னை தெரிந்து கொண்டீர்
ஏழை என் நாவினில் பாடிடும் ஓரு தொனி
இயேசுவே நான் பாடும் கல்யாணி
நித்தம் நித்தம் புதுப்பாடல்
பாடிட நேசரே உம் அன்பைக் கூறிட
கெட்ட ஆவி நெடுந்தூரம் ஓடிட
பாட்டுப்பாடின தாவீதைப் போல்
அந்தப் பாடலில் இருந்த வல்லமை
இந்த வேளையில் இணங்கச் செய்யவே
வருவீர் வரம் தருவீர்
கிருபை தினம் பொழிவீர்
எந்தன் நாவில் உன்தன் வேதம்
எங்கும் ஒலிக்க கிருபை செய்வீர்
Details
- Numeric ID
- 109
- Song ID
- ithuvarai-seitha-seyalkalukaaka-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0