Lyrics
ஐயரே நீர் தங்கும் என்னிடம்
ஐயரே நீர் தங்கும் இப்போது
அந்தி நேரம் பொழு தஸ்தமித்தாச்சே
ஐயா நீர் இரங்கும்
பகல்முழுதுங் காத்தீர் சென்ற
பகல்முழுதுங் காத்தீர் தோத்திரம்
பரமனே இந்த இரவிலும் வாரும்
பாவியை நீர் காரும்
தங்கா தொரு பொருளும் என்னிடம்
தங்கா தொரு பொருளும் யேசு
தற்பரனே நீர் ஒருவரேயென்னில்
தங்கித் தயைபுரியும்
உயிரே துமையன்றிப் பாவிக்
குயிரே துமையன்றி என்றன்
உடல் உயிர் உம்மால் உய்கிறதையா
உத்தமனே தங்கும்
நீர் தங்கிடும் வீட்டில் யேசுவே
நீர் தங்கிடும் வீட்டில் எல்லாம்
நிறைவே குறைவுண்டாமோ கர்த்தா
நின்னை விடமாட்டேன்
என்பாவம் மனியும் இறையே
என்பாவம் மனியும் அப்போது
எளியேன் உம்மோடபீயர்வேன் இரவில்
எனக்கோர் திகிலேது?
எனக்கு நீர்காவல் என்றும்
எனக்கு நீர்காவல் என்றன்
இனத்தார் ஜனத்தார் எளியோர் வலியோர்
எல்லவர்க்குங் காவல்
உம்மோடே படுப்பேன் ஐயா
உம்மோடே படுப்பேன் இரவில்
உம்மோடேயர்வேன் சேதமில்லாமல்
உம்மோடெழுந்திருப்பேன்
Details
- Numeric ID
- 5894
- Song ID
- iyare-neer-thangum
- Views
- 1
- Downloads
- 1