Lyrics
இயேசு உமதைந்து காயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது
உம்முடைய வாதையின்
நினைவு என் மனதின்
இச்சை மாளுவதற்காக
என்னிலே தரிப்பதாக
லோகம் தன் சந்தோஷமான
நகர வழியிலே
என்னைக் கூட்டிக்கொள்வதான
மோசத்தில் நான் இயேசுவே
உமது வியாகுல
பாரத்தைத் தியானிக்க
என் இதயத்தை அசையும்
அப்போ மோசங்கள்கலையும்
எந்தச் சமயத்திலேயும்
உம்முடைய காயங்கள்
எனக்க நுகூலம் செய்யும்
என்பதே என் ஆறுதல்
ஏனெனில் நீர் எனக்கு
பதிலாய் மரித்தது
என்னை எந்த அவதிக்கும்
நீங்கலாக்கி விடுவிக்கும்
நீர் மரித்ததால் ஓர்க்காலும்
சாவை ருசிபாரேனே
இதை முழு மனதாலும்
நான் நம்பட்டும் இயேசுவே
உமது அவஸ்தையும்
சாவின் வேதனைகளும்
நான் பிழைக்கிறதற்காக
எனக்குப் பலிப்பதாக
இயேசு உமதைந்துகாயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது
முடிவில் விசேஷமாய்
என்னை மீட்ட மீட்பராய்
என்னை ஆதரித்தன்பாக
அங்கே சேர்த்துக் கொள் வீராக.
Details
- Numeric ID
- 5970
- Song ID
- iyesu-umthainthu-kaayam
- Views
- 1
- Downloads
- 1