Jeeva Vasanang Kooruvom ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே
ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே
Lyrics
ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்
பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே
பாதகப் பேயின் வலையில் ஐயோ திரள்பேர்
பட்டு மடியும் வேளையில்
பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே
காடுதனிலே அலைந்தே கிறிஸ்தேசு
கர்த்தன் சேவையில் அமர்ந்தே
நாடு நகர் கிராமந் தேடி நாம் பெற்றடைந்த
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய
பூலோகம் எங்கும் நமையே கிறிஸ்து நாதர்
போகச் சொல்லி விதித்தாரே
காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற
கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந்திரிந்து
விண்ணின் மகிமை துறந்தார் கிறிஸ்துநமை
மீட்கக் குருசில் இறந்தார்
மண்ணின் புகழ் பெருமை எல்லாம் தூசுகுப்பை என்
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியடு
Details
- Numeric ID
- 6115
- Song ID
- jeeva-vasanang-kooruvom
- Views
- 0
- Downloads
- 0