Lyrics
வாட்டமுற்று சுற்றி திரிந்த ஆடுகுட்டி நான்..
என்னில் நாட்டம் கொண்டு என்னை கண்ட அன்பு கர்த்தரே..
கரம் நீட்டி என்னை தொட்டு தூக்கி தோலில் வைத்த..
மீட்பரான இயேசுவை நான் எண்ணி துதிக்கிறேன்
ஜீவன் தந்த தேவன் என்னை சுமந்து வந்தாரே
மேய்ச்சல்லான இடத்தினிலே இறக்கி வைத்தாரே
பசி ஆர வைத்தாரே
நடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன்
அவற்றை கடந்து வந்ததை எண்ணி திகைத்து பார்க்கிறேன்
உடைந்து போய் உருக்குலைந்த வாழ்க்கை பாதையின்
தடைகள் நீக்கி கடந்து வர கரம்க்கொடுத்தாரே
தடைகள் நீக்கி கடந்து வர கரம்க்கொடுத்தாரே
கரடு முரடு துன்ப மேட்டில் ஏறும் வேளையில்
தன் கரங்களாலே தூக்கி கஷ்டம் நீக்கிவிட்டாரே
தள்ளாடிய கால்களுக்கு பெலன் கொடுத்தவர்
என் உள்ளத்திலே புதிய தெம்பை பெருகவைத்தாரே
என் உள்ளத்திலே புதிய தெம்பை பெருகவைத்தாரே
(பாவ)புதரில் சிக்கி மீண்டிடாத நிலையில் இருந்ததால்
என் கதறல் சத்தம் கேட்ட இயேசு பரிவு கொண்டாரே
உடலில் பட்ட காயங்களில் கட்டு பொட்டவர்
என் உடன் இருந்து இர
பகல்லாய் பாதுகாத்தாரே
உடன் இருந்து இர பகல்லாய் பாதுகாத்தாரே
Details
- Numeric ID
- 1271
- Song ID
- jeevan-thantha-devan-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0