Jegamathil Uthitha Jeya Jothiye ஜெகமதில் உதித்த ஜெய

ஜெகமதில் உதித்த ஜெய
Unknown
Lyrics

Lyrics

ஜெகமதில் உதித்த ஜெய ஜோதியே – நரர் சேயர்கள் துதித்திடும் திருவடியே பாரில் பரனாக நீரே பாவிகட்காய்ப் பலியானீர் அன்பால் என்னை ஆட்கொண்டானே அதிரூப சுந்தரனே 1. பாவயிருள் நீக்கிப் பாரினிலே – பரன் பாவிகள் பாவம் போக்க பலியானீரோ சாபத்தை முற்றும் தொலைத்திடவே சக்தியாக உயிர்திட்டிரோ அரூபா கொரூபா அற்புதனே ஆனந்த பொற்பரனே 2. எந்தனின் நீதியெல்லாம் கந்தையல்லோ நீர் என்தனின் சிறப்பான தாரகமே அன்பே ஆனந்தப் பேரொளியே அதியந்தமில்லாப்பரனே கதியே நிதியே கருணாகரா காத்திடும் புகலிடமே 3. ஏழையென்னில் தாகம் கொண்டதாலே – எழில் ஏகனே எனக்கு திவ்யாகாரமே தாகமிஞ்சி வாடுறேனையா தனியானேன் இத்தாரணியில் காசினியில் நேசரைப் போல் காணுவேனோ கல்வாரியின் காந்தரூபா 4. எப்போ உம்மைக் கண்டு மகிழ்ந்திடுவேன் – அண்ணல் இயேசுவே இன்பமாக மணாளனே கன்மலைவெடிப்பில் தங்குமென் உத்தமியே என்றழைக்கும் சத்தம் கேட்கும் கீதம் ஆ! இன்பமே கூறிடீரோ அன்பரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4366
Song ID
jegamathil-uthitha-jeya-jothiye-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0