Lyrics
காக்க வல்ல கர்த்தர் உண்டு
நம்மை என்றும் காக்க,
காத்திடுவார் உன்னை என்னை
வல்லமையின் கரத்தால்
1.துதிகளினால் அவர் நாமத்தை
உயர்த்திடுவோம் காத்திடுவார்.
எரிகோ எம்மாத்திரம்- அல்லேலூயா
எரிகோ எம்மாத்திரம். – காக்க வல்ல
2. விசுவாசத்தால் தாவீதைப்போல்
துணிந்து சென்றால் ஜெயம் தருவார்
கோலியாத் எம்மாத்திரம்- நம் பரமன்முன்
கோலியாத் எம்மாத்திரம். – காக்க வல்ல
3.அவர் சொற்படி முன்சென்றால்
சமுத்திரமும் வழி தருமே
செங்கடல் எம்மாத்திரம்- அலைமோதும்
செங்கடல் எம்மாத்திரம். – காக்க வல்ல
4. அவர் ஜனத்தை மீட்கும்படி
வாதைகளை அனுப்பிடுவார்.
பார்வோன் எம்மாத்திரம்- பரமன்முன்
பார்வோன் எம்மாத்திரம். – காக்க வல்ல
Details
- Numeric ID
- 4253
- Song ID
- kaaka-valla-karthar-undu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0