Kaalaiyil Thuthippaen Karuththudan காலையில் துதிப்பேன் கருத்துடன்
காலையில் துதிப்பேன் கருத்துடன்
Unknown
Lyrics
Lyrics
காலையில் துதிப்பேன்
கருத்துடன் துதிப்பேன்
காலை தேடுவோர் கண்டடைவார் என்ற
கர்த்தனையே துதிப்பேன்
1. போன ராவினில் காத்தீர்
புது காலையை காணச் செய்தீர்
தேனே என் உள்ளத்தில் தானே இருந்து
இந்நாளை கடக்க செய்வீர்
2. இந்த வனாந்திரத்தில்
எனக்கெந்த இடர் வந்தாலும்
இயேசுவே உம்மில் சார்ந்திருக்கும் எந்தன்
ஜெயம் ஜெயம் நீர் தானே
3. ஆதி அன்பை இழந்தே
ஜனம் வாடி தவித்திடுதே
ஆதி சபை அதிகாலையில் பெற்ற பின்
மாரி பொழிந்திடுமே
4. புதிதான உம் கிருபை
என்னில் உதிரமாய் சிந்தினதால்
பதினாயிரம் துதி அதிகாலையில் கூறி
பாடிப் புகழ்ந்திடுவேன்
5. கறைதிரை யாவும் நீங்கி
சுத்த கற்புள்ள கன்னிகையாய்
வானில் வரும் மணவாளனை சந்திக்க
வாஞ்சை பெருகுதையா
6. இயேசுவே நீர் வந்தாலும்
என்னை மரணம் சந்தித்திட்டாலும்
ஆயத்தமாய் உந்தன் சேவை செய்து
அல்லேலூயா வோடெதிர் நோக்குவேன்
Details
- Numeric ID
- 4234
- Song ID
- kaalaiyil-thuthippaen-karuththudan-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0