Kaapaar Unnai Endrendrum Vazhuvaamalae காப்பார் உன்னை என்றென்றும் வழுவாமலே
காப்பார் உன்னை என்றென்றும் வழுவாமலே
Lyrics
காப்பார் உன்னை
என்றென்றும் வழுவாமலே
இம்மட்டும் காத்தார் இம்மானுவேலாய்
இன்னமும் காத்திடுவார்
1. கோழி தன் குஞ்சுகளை
கூவி அழைக்குமா போல்
என்னை தம் சிறகுகளால்
அணைத்து காத்திடுவார்
2. கண்ணீர் கவலையுடன்
கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
கர்த்தரின் நாமத்தினால்
மதிலை தாண்டிடுவேன்
3. சோதனை சோர்வுகளில்
சோர்ந்திடாமல் காக்கின்றார்
நெரிந்த நாணல் முறியாத (தேவன் )
நிமிர்த்தி உயர்த்திடுவார்
4. இவ்வுலக பாடுகள்
என்னை என்ன செய்திடும்
நல்ல போராட்டம் போராடி
ஓட்டத்தை முடித்திடுவேன்
5. ஆனந்த கீதங்களால்
ஆர்ப்பரித்து மகிழ்வேன்
அல்லேலூயா பாடுவேன்
அன்பரின் நாமத்தினால்
Details
- Numeric ID
- 3919
- Song ID
- kaapaar-unnai-endrendrum-vazhuvaamalae-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open