Kaapavar காப்பவர்

காப்பவர்
Unknown
Lyrics

Lyrics

உள்ளங்கையில் என்னை வரைந்தீரையா, தாயின், கருவிலே கண்டவரே -(2) துன்பம் என்னை சூழ்ந்தாலும், இன்பம் இழந்து நின்றாலும், காப்பவர் நம்மோடுண்டே; காப்பவரே, என்னை நடத்துபவரே, நிறுத்தினீரே நீரே உயர்ந்தவரே; காப்பவரே, என்னை நடத்துபவரே, நிலை நிறுத்தினீரே நீரே உயர்ந்தவரே; போற்றுவேன், என்றும் வாழ்த்துவேன், கண்மணி போல, என்னை பாதுகாத்தீரே; 1) உம்மைப்போல என்னை படைத்தீரையா உந்தன், சேவைக்காய் அழைத்தவரே -(2) போகையிலும், வருகையிலும், ஆழ்கடலில் மூழ்கையிலும், என் தேவன் என்னோடுண்டே; 2) கழுகை போல நானும் பெலனடைந்து, செட்டை அடித்து மேலே உயர்ந்திடுவேன், நீதிமானாய் என்னை நீர் நிறுத்தினீரே, ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திடுவேன் சிங்க கெபியில் நான் முடங்கி அடைபட்டாலும், ஜீவனுள்ள தேவன் என் அருகில் உண்டு, சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ராஜனே, உமக்காய் என்றும் ஓடிடுவேன் -(2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2468
Song ID
kaapavar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0