Lyrics
உள்ளங்கையில் என்னை வரைந்திரே
தாயின் கருவிலே கண்டவரே (2)
துன்பம் என்னை சூழ்ந்தாலும்
இன்பம் இழந்து நின்றாலும்
காப்பவர் நம்மோடு உண்டே
காப்பவரே என்னை நடத்துபவரே
நிறுத்தினீரே நீரே உயர்ந்தவரே (2)
போற்றுவேன் என்றும் வாழ்த்துவேன்
கண்மணி போல என்னை பாதுகாத்தீரே
உம்மை போல என்னை படைத்தீரையா
உந்தன் சேவைக்காய் அழைத்தவரே
போகையிலும் வருகையிலும் ஆழ்கடலில்
மூழ்கையிலும் நம் தேவன் நமோடு உண்டே
காப்பவரே என்னை நடத்துபவரே
நிறுத்தினீரே நீரே உயர்ந்தவரே
போற்றுவேன் என்றும் வாழ்த்துவேன்
கண்மணி போல என்னை பாதுகாத்தீரே
கழுகை போல நான் பெலனடைந்து
செட்டை அடித்து மேலே உயர்ந்திடுவேன்
நீதிமானை என்னை நீர் நிறுத்தினீரே
எழுதரம் விழுந்தாலும் எழுந்திடுவேன்
சிங்க கேபியில் முடங்கி நான் அடிபட்டாலும்
ஜீவனுள்ள தேவன் என் அருகில் உண்டே
சிங்காசனத்தில் வீற்றிவுக்கும் ராஜனே
உமக்காய் என்றும் ஓடிடுவேன்
காப்பவரே என்னை நடத்துபவரே
நிறுத்தினீரே நீரே உயர்ந்தவரே
போற்றுவேன் என்றும் வாழ்த்துவேன்
கண்மணி போல என்னை பாதுகாத்தீரே
Details
- Numeric ID
- 910
- Song ID
- kaapavar-ullangaiyil-ennai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0