Kaarirul Nearam Thanimaiyin Kaalam காரிருள் நேரம் தனிமையின் காலம்
காரிருள் நேரம் தனிமையின் காலம்
Unknown
Lyrics
Lyrics
காரிருள் நேரம் தனிமையின் காலம்
கதறிடும் சூழல் பரவிடுதே
காத்திடும் கூட்டம் பரன் முகம் காண
பறந்திடும் ஆவல் பெருகிடுதே-2
பெலப்படு (2) கர்த்தரில் பெலப்படு
கருணையின் காலம் கடந்திடுதே
பெலப்படு (2) ஆவியில் பெலப்படு
கொடுமையின் காலம் நெருங்கிடுதே-2
1. கர்த்தருக்குள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து
முதியோரை நேசித்து கனம் பண்ணி-2
முத்து நன்மை உண்டாகும் வாழ்வோடு
பூமியில் நீடித்து வாழ்ந்திடவே-2
2. தந்திர சாத்தானை எதிர்த்திடவே
திராணி உள்ளோராய் நிற்கும்படி
சர்வாயுத வர்க்கம் தரித்தோராய்
சகலமும் செய்து வாழ்ந்திடவே
3. கிறிஸ்துவின் ஸ்தானாதி பதியாக
சுவிசேஷ இரகசியம் அறிவித்திட
எல்லா சமயமும் தைரியமாய்
சத்திய சாட்சியாய் வாழ்ந்திடவே
Details
- Numeric ID
- 1543
- Song ID
- kaarirul-nearam-thanimaiyin-kaalam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0