Kaarirul Soozhnthidum காரிருள் சூழ்ந்திடும் நேரம்
காரிருள் சூழ்ந்திடும் நேரம்
Lyrics
காரிருள் சூழ்ந்திடும் நேரம்
கர்த்தாவே என் பக்கம் நீரே
யாருமின்றி அனாதையாய்
அலைந்த என்னை அணைத்தீரே
கானகப்பாதை நான் செல்கையில்
காதலனாய் வந்து காத்திடுவீர்
கரடானாலும் முரடானாலும்
காருண்யத்தால் என்னைத் தேற்றிடுவீர்
மாராவின் தண்ணீர் மதுரமாகும்
மாறாத நேசர் நீர் சொந்தமானீர்
இயேசுநாதா (2) எளியேனைக்
கரங்கொண்டு தாங்கிடுவீர்
என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
கர்த்தாவே நின் கிருபை தாங்கிடுதே
எந்தன் கொம்பை எண்ணெயினால்
அபிஷேகம் பண்ணி உயர்த்திடுவீர்
Details
- Numeric ID
- 5580
- Song ID
- kaarirul-soozhnthidum-neram
- Views
- 1
- Downloads
- 1