Lyrics
காரிருள் தீபமல்லோ
எந்தன் மேய்ப்பர் இயேசு இராஜா
திருவசனம் தரும் ஒளியில்
அனுதினமும் நான் நடப்பேன்
1. அலைகள் என்மேல் மோதினாலும்
அக்கினியில் நான் நடத்திட்டாலும்
அதிசயமாய் வழி நடத்தி
அரவணைப்பார் திருமார்பில்
2. சேனைகள் என் முன் நின்றாலும்
பயப்படேன் நான் பதறிடேனே
சேனைகளின் கர்த்தரவர்
சேதமின்றி காத்திடுவார்
3. உழையான சேற்றினின்றும்
எடுத்தென்னை கரை சேர்த்தார்
புது கீதம் நாவில் தந்தார்
துதி பாடி நான் புகழ்ந்திடுவேன்
4. அன்பர் ஓர்நாள் வெளிப்படுவார்
அவருடன் நான் பறந்துயர்வேன்
அவரருகில் அனுதினமும்
ஆனந்தமாய் நான் வசிப்பேன்
Details
- Numeric ID
- 2325
- Song ID
- kaarirul-theepamallo-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0