Lyrics
காருண்யத்தால் அழைத்து
காத்து கொண்டவரே
கருவில் உருவாகுமுன்பே
என்னை கண்டு தெரிந்தவரே
இரத்ததால் கழுவி கழுவி துத்திகரித்தவரே
கர்த்தர் உமக்காக என்னை பிரித்கெடுத்தவரே
உங்க கிருபை எனக்கு போதும்
புது பெலனை எனக்கு தாரும்
இயேசு அப்பா உம் கிருபை மட்டும் என்னோடு இருந்ததாலே
இந்த உலகமே என்னை எதிர்த்தாலும் அழிந்து போகல நானே
என் பெலவீன நாளிலும் உம்மை நம்பி நடந்ததனாலே என்
பாதம் கல்லில் இடறாமல் தூக்கி சுமப்பவர் நீரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் இருந்ததனாலே
இனி நிரந்தரமாய் என் தோல்வி சோர்வும் நீங்கி மறைந்திடும்தானே
நான் நினையாத நேரம் என்னை தேடிவந்த தெய்வம் நீரே
மன சஞ்சலங்களை மாற்றி மனமகிழ்ச்சி தந்தவர் நீரே
பெருமை வந்த வாழ்வு சரப்பணியைப் போல மூடும் மிக
கொடுமை கடின ஆடைப்போல இறுக்கி மூடி கொள்ளும்
என் பெலத்தின் பெருமை எல்லாம் இனி ஒழிந்து போக பண்ணும்
சுய பெருமை மகிமை நீக்கி மனதாழ்வின் ஆவி ஊற்றும்
Details
- Numeric ID
- 4246
- Song ID
- kaarunyathaal-azhaithu-kaaththu-kondavarae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0