Kalangidaathae Nee Thigaiththidaathae கலங்கிடாதே நீ திகைத்திடாதே
கலங்கிடாதே நீ திகைத்திடாதே
Lyrics
கலங்கிடாதே நீ
திகைத்திடாதே நான்
காக்கும் தேவன் என்றாரே
கலங்கிடாதே
1. மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்
மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்
மலைகள் விலகி அகன்று போனாலும்
மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே
அலைகள் மோதி படகு அசைந்தால்
அமைதி தரவே வந்திடுவேன்
அமைதி தரவே வந்திடுவேன்
2. கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்
கண்ணீர் உந்தன் உணவானாலும்
கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
கரம் பிடித்தல் உன்னை நடத்திடுவேனே
3. உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன்
உனக்காகவே மனம் உருகியே நின்றேன்
உந்தனை எந்தன் கரமதில் வரைந்தேன்
உனக்காக யாவையும் செய்து முடிப்பேன்
Details
- Numeric ID
- 2740
- Song ID
- kalangidaathae-nee-thigaiththidaathae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0