Kalvaari Ennum Thottaththilae En கல்வாரி என்னும் தோட்டத்திலே
கல்வாரி என்னும் தோட்டத்திலே
Lyrics
கல்வாரி என்னும் தோட்டத்திலே என்
கர்த்தர் தொங்கும் மரத்தினிலே
ஏழு பூக்கள் பூத்ததைய்யா அது
ஜீவ பூக்கள் ஆனதைய்யா (2)
1. ஆணிகள் அடித்து வதைத்தவர்க்கு உம்
மேனியில் வேதனை கொடுத்தவர்க்கு
பிதாவே இவர்களை மன்னியும் என்று
முதலாம் மலர்ந்த மன்னிப்பு
2. குற்றம் புரிந்த ஒரு கள்ளனுக்கு அவன்
சத்தம் அறிந்த அன்பு மனம் உமக்கு
இன்று பரதேசியில் இருப்பாய் என்று
இரக்கத்தால் மலர்ந்த இரட்சிப்பு (சிலுவையில்)
3. ஈன்ற எடுத்த அன்னை துடிக்க கண்டு உம்
இதயத்திலே பாச உணர்வு கொண்டு
ஸ்திரியே அதோ உன் மகனென்று
பாசத்தால் மலர்ந்த பராமரிப்பு (தாய்)
4. கைவிட்ட பட்டோரை காக்க வந்து மாந்தர்
கண்ணீர் யாவையும் துடைக்க வந்தீர்
என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று
தனிமையில் மலர்ந்த தவிப்பு (சிலுவையில்)
5. ஜீவ தண்ணீர் வரும் கன்மலையே மாந்தர்
பாவத்தை போக்கிடும் உம் நிலையே
தாகமாய் இருக்கிறேன் என்றுரைத்து
ஆத்ம தாகத்தால் மலர்ந்த களைப்பு (சிலுவையில்)
6. தொடர்ந்தது பாவம் உலகத்தினிலே
இரத்தம் வடிந்தது இரட்சிக்க சிலுவையிலே
முடிந்தது எல்லாம் என்றுரைத்து
முழுமையாய் மலர்ந்த பூரிப்பு (சிலுவையில்)
7. பாவியை மீட்க வந்தவரே தூய
தேவனின் ஆவியை தந்தவரே
உம் கரத்தினில் என் ஆவியை தந்துவிட்டேன் என்று
உன்னதமாய் மலர்ந்த ஒப்புவிப்பு
Details
- Numeric ID
- 6997
- Song ID
- kalvaari-ennum-thottaththilae-en-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open