Lyrics
கல்வாரி மலையோரம்
சிலுவை அடிவாரம்
ஏழையின் பாவம் தீரும்
கண்ணீரின் ஜெபம் கேளும்
1. உலகம் தந்திடாத சமாதானத்தை
தருவேன் என்றீர் கரம் பிடிப்பேன் என்றீர்
கல்வாரி இயக்கத்தால் எத்தனை மாற்றி
அருள்மாரி பெறவே உம் பாதம் வந்தேன்
2. அன்பு இல்லாத இந்த மண்ணுலகில்
ஆச்சரியமாய் அன்பின் உருவாய்
உந்தனின் முகத்தை குருசினில் கண்டேன்
விந்தையின் அன்பிற்கு
என்னையே தந்தேன்
3. எந்தனின் ஜீவிய காலமெல்லாம்
உமக்காகவே உமது புகழ் பாடவே
உறுதியாய் நிற்பேன் உம் பணி செய்வேன்
உந்தனின் வல்லமை தாருமே தேவா
Details
- Numeric ID
- 2735
- Song ID
- kalvari-malaiyoram-siluvai-adivaram-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0