Lyrics
கல்வாரி மலை ஓரம் சிலுவை அடிவாரம்
ஏழையின் பாவம் தீரும்...
கண்ணீரின் ஜெபம் கேளும்-2
1. உலகம் தந்திடாத சமாதானத்தை
தருவேன் என்றீர் கரம் பிடிப்பேன் என்றீர்
கல்வாரி இரத்தத்தால் எந்தனை மாற்றி
அருள்மாரி பெறவே உம்பாதம் வந்தேன்
2. அன்பு இல்லாத இந்த மண்ணுலகில்
ஆச்சரியமாய்... அன்பின் உருவாய்
உந்தனின் முகத்தை குருசினில்
கண்டேன் - விந்தையின் அன்பிற்கு
என்னையே தந்தேன்
3. எந்தனின் ஜீவிய காலமெல்லாம் உமக்காகவே
உமது புகழ் பாடவே-உறுதியாய் நிற்பேன்
உம் பணி செய்வேன்-உந்தனின்
வல்லமை தாருமே தேவா
Details
- Numeric ID
- 1508
- Song ID
- kalvari-mamalai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0