Lyrics
கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை
அஞ்சாதே என் மகனே மிங்கும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கென் இப்பாடு உனக்காகத் தானே
ஈனக்கோலமடைந்தேன்
உன்னை இரட்சித்தேன் என்றார்
கர்த்தரின் சத்தமதை சத்தியிம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே
Details
- Numeric ID
- 5648
- Song ID
- kalvari-mamalai-mel
- Views
- 1
- Downloads
- 1