Kalvari Mettil Kodungakora கல்வாரி மேட்டில் கொடுங்கோர குருசில்
கல்வாரி மேட்டில் கொடுங்கோர குருசில்
Lyrics
கல்வாரி மேட்டில் கொடுங்கோர குருசில்
என் இயேசு தேவன் தொங்குகின்றார்
என் பாவம் போக்க மாசற்ற தேவன்
எனக்காக யாவும் துறந்து நின்றார்
1. திருமேனி எங்கும் காயங்களாலே
திரு ரத்தம் பாய்ந்து வழிந்தோடும் காட்சி
ஏழை என் நெஞ்சம் ஏங்கியே வாட
ஏன் இந்த கோலம் எனக்காக தானோ
2. தலை சாய்க்க உலகில்
இடம் இல்லை என்றே
பெரும் பார குருசில் தலை சாய்த்தீர் தேவா
விலையேற பெற்ற நின் உதிரத்தால் மீட்க
விலையாக எனக்காய் உம் ஜீவன் தந்தீர்
3. உம்மைப்போல் என்னை மாற்றிட தேவா
பலியாக தந்தீர் உம் அன்பு பெரிதே
உம் அன்புக் கீடாய்
நான் என்ன கொடுப்பேன்
தலை தாழ்த்தி இன்று
என்னையே தந்தேன்
Details
- Numeric ID
- 6995
- Song ID
- kalvari-mettil-kodungakora-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open