Kalvaryil Thongum Yesuvai Paar கல்வாரியில் தொங்கும் இயேசுவைப் பார்
கல்வாரியில் தொங்கும் இயேசுவைப் பார்
Lyrics
கல்வாரியில் தொங்கும் இயேசுவைப் பார்
கல்மனம் மாற்றி உன்னை இரட்சிப்பார்
மனுமக்களின் பாவ பாரங்கள்
மனக்கவலை சுமந்தவரே
பரிகாரியே பலியானவரே
விரித்த கரம் ஆணி பாய்ந்ததுவே
வினை அகற்றும் அமைதி தரும்
வல்லமை மிகும் நல்ல பிதாவே
உனக்கு சமாதானம் தந்திடவே
உயிர் கொடுத்தார் இதை நம்பியே பார்
தாய் தகப்பன் உன்னைக் கைவிட்டும்
தளர்ந்திடாதே கர்த்தரண்டை வா
அவர் உன்னை அன்புடன் சேர்த்துக்கொள்வார்
அடைக்கலம் தந்துன்னை ஆதரிப்பார்
சதை கிழிய வாரடிப்பட்டார்
சோக முகத்தில் இரத்தம் வடிய
சிரசினில் முள்முடி ஏற்று நின்றார்
சிவப்பங்கியும் தரித்து நடந்தார்
போர் வீரர்கள் பலவந்தமாய்
பரிசுத்தரை இழுத்துச் செல்ல
நடக்க பெலன் இல்லை தள்ளாடினார்
நீண்ட குருசேற்று மலை ஏறினார்
அறைந்தனரே உமிழ்ந்தனரே
அந்தப் பகைஞர் அன்பர் முகத்தில்
அழகுமில்லை சௌந்தரியமுமில்லை
அருமை இயேசு அந்தக்கேடடைந்தார்
Details
- Numeric ID
- 5618
- Song ID
- kalvaryil-thongum-yesuvai-paar-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open