Kandirkalo Siluvaiyil Song பாமாலை: 106 கண்டீர்களோ சீலுவையில்
கண்டீர்களோ சீலுவையில்
Lyrics
கண்டீர்களோ சீலுவையில்
மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ காயங்களில்
சொரியும் ரத்தத்தை
மன்னியும் என்ற வேண்டலை
கேட்டீர்களே ஐயோ
ஏன் கைவிட்டீர் என்றார்
அதை மறக்கக்கூடுமோ
கண்மூடி தலை சாயவே
முடிந்தது என்றார்
இவ்வாறு லோக மீட்பையே
அன்பாய் உண்டாக்கினார்
அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
ஈடேற்றம் வந்ததே
ஆ பாவீ இதை நோக்குங்கால்
உன் தோஷம் தீருமே
சீர்கெட்டு மாண்டு போகையில்
பார்த்தேன் என் மீட்பரை
கண்டேன் கண்டேன் சிலுவையில்
மரிக்கும் இயேசுவை
Details
- Numeric ID
- 5098
- Song ID
- kandirkalo-siluvaiyil-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0