Kangalai Yeredupen Song கண்களை ஏறெடுபேன் – மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுபேன் – மாமேரு நேராய் என்
Lyrics
கண்களை ஏறெடுபேன் – மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுபேன்.
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும்.
1.காலைத்தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத்தள்ளாட வொட்டார்,
வேலையில் நின்றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர்.
2.பக்க நிழல் அவரே – எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டென்னை அக்காவல் புரியவே
3.எல்லாத் தீமைகட்கும் என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர்
Details
- Numeric ID
- 5635
- Song ID
- kangalai-yeredupen-2
- Views
- 1
- Downloads
- 1