Kanivaana Karangal Nadi Vanthaenae கனிவான கரங்கள் நாடி வந்தேனே
கனிவான கரங்கள் நாடி வந்தேனே
Lyrics
கனிவான கரங்கள் நாடி வந்தேனே
கர்த்தாவே கிருபை செய்தீர்
பணிவோடு வந்தேன் பாரம் சுமந்தீர்
பரமனே உம் தயவே
1. பேய்திரள் கூட்டம் பாதகம் செய்ய
பேதையை நாடினதே
வாய்விட்டு அழுதேன் வல்லமை தந்தீர்
உன்னதா உம் பெலத்தால்
தாய் அன்பின் மேலாய்
தாங்கினீர் என்னை
தேவா உம் அருள் பெரிதே
யேகோவா வாக்குகள் மாறாததே
2. அநியாயம் சொன்னார் மன்னியாமல்
போனார் அந்நியனாய் அகன்றேன்
தனியாக நின்றேன் என்னை அழைத்தீர்
தேவனே உம் பணிக்கே
இனி எந்தன் வாழ்வு கனியால் நிறைய
இயேசுவே ஜெயம் தாருமே
உம்மோடு பேசுவேன் பதில் தாருமே
Details
- Numeric ID
- 7459
- Song ID
- kanivaana-karangal-nadi-vanthaenae-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open