Kanivin Karam Ennai Thangida கனிவின் கரம் என்னை தாங்கிட
கனிவின் கரம் என்னை தாங்கிட
Lyrics
கனிவின் கரம் என்னை தாங்கிட நான் அஞ்சிடேன்
இருள் உலகின் பயணங்களில் நீர் என்னுடன்
வரும் போது உம் சமூகம்
அருள் வேண்டும் எந்தன் ஜெபம் - 2
வாரும் என் தேவா என வேண்டி நான் இருக்க
நீர் இல்லா நானும் நான் இல்லை என நினைக்க - (கனிவின் கரம்)
என்ன ஆனாலும் உந்தன் அன்பில்
என்றும் நீர் என்னை சேர்த்திடுவாயே
ஜீவனானாலும் மரண மானாலும்
உம்மில் நிலைத்து நான் இருப்பேன்
உம் முகம் நோக்கி அலைகளை கடப்பேன்
உம் நாமம் உச்சரித்து உயிர்பெறுவேன் - 2
காலமெல்லாம் உம்மை துதிப்பேன்
நன்றிகளை ஏறெடுப்பேன் - 2 - (கனிவின் கரம்)
வானம் பூமி மாறினாலும்
என்றும் மாறா நல் நேசரே
வாக்குத்தத்தம் தந்த தேவா
என்றும் காக்கும் நல் நாயகா
உம் நாமம் கொண்டு சாத்தானை வெல்வேன்
உம் இரத்தம் கொண்டு ஜெயித்திடுவேன் - 2
வாழ் நாளெல்லாம் உம்மை புகழ்வேன்
Details
- Numeric ID
- 6943
- Song ID
- kanivin-karam-ennai-thangida-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open