Lyrics
கனியிலும் அதிமதுரம்
இயேசுவின் நாமம் மனிதரில் பேரின்பம்
அது நளத் தைலத்திலும் விலையுயர்ந்த
உடைந்திட்ட நறுமணம் ஊற்றுண்ட பரிமளம்
1. மணம் வீசும் கமழ் கொண்ட
வாசனை தைலம்
ஆசையுடன் முகர்ந்த பொற்பாதமே
நாசியில் சுவாசமுள்ள மனுஷர்கள் யாவரும்
நேசித்து சுவாசிக்கும் உயிர்
மூச்சென் இயேசுவே
கந்த வர்க்கம் நளத் தைலம்
லீபனோனின் வாசனை வீசும்
வெள்ளை போளம் பரிமளமே
சாரோனின் ரோஜா பள்ளத்தின் லீலி
உள்ளத்தின் நேசர் என் அன்பு தேவன்
2.கன்னங்கள் கந்தவர்க்க பாத்திகள் போல
வாசனை வீசிடும் லீலி புஷ்பமே
கரங்கள் படிகப் பச்சை பதித்த பொன் போல
அங்கமோ இந்திர நீல இரத்தினம்
இழைத்த பிரகாசம் - கால்கள்
பொன் ஆதார வெள்ளை கல்தூண்கள்
ரூபம் லீபனோனின் கேதுரு போல
பாலில் கழுவின் அழகு கண்கள்
மதுரமானவர் இனிமையானவர்
இவரே எந்தன் பிரியமானவர்
Details
- Numeric ID
- 1515
- Song ID
- kaniyilum-athimathuram-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0