Lyrics
கன்மலையில் நிறுத்தி என்னை அழகு பார்த்த தெய்வமே
காலமெல்லாம் கரம் பிடித்து வழி நடத்தும் தெய்வமே
கன்மலையில் நிறுத்தி என்னை அழகு பார்த்த தெய்வமே
காலமெல்லாம் கரம் பிடித்து வழி நடத்தும் தெய்வமே
என் தகப்பனே தந்தையே வாழ்வே நீர்தான் ஐயா
வாழ வைத்தவர் நீர்தான் ஐயா
என் இலட்சிய கரையில் சேரும் வரைக்கும் கைவிடுவதில்லை
என் முடிவு வரைக்கும் வாழ வைக்கும் மணவாளனே
1. பாவியாய் இருந்த என்னை மோசமாய் வாழ்ந்த என்னை
நித்தமாய் வாழ வைக்க தேடி வந்தீரே
நித்தமாய் வாழ வைக்க தெரிந்து கொண்டீரே
2.எத்தனையோ பேர் இருந்தும்
எத்தனாய் வாழ்ந்த என்னை
இரத்தத்தால் கழுவி என்னை தூக்கினீர் ஐயா
இரத்தத்தால் மகனாக மாற்றினீர் ஐயா
3.சத்துருக்கள் எனக்கெதிராய் பாளையம் இறங்குகையில்
என் தேவன் என்னோடு கைப்பிடித்தீரே
என்னை தாங்கி நடத்தி உயர்த்தி வைத்தீரே
என்னை வாழ வைத்து அழகு பார்த்தீரே
Details
- Numeric ID
- 726
- Song ID
- kanmalaiyil-niruthi-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0