Lyrics
கன்மலையே கர்த்தாவே
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணியே நன்றி சொல்வேன்
கண்மணி போல் காப்பவரே
அனுதினமும் என்னை நடத்தும்
உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்
வாழ்வின் பாதை இதுவே என்றீர்
கரம் பிடித்தே நடத்தினீர்
பலவீன நேரத்திலும்
பரிகாரியானவரே
எல்லா இக்கட்டு நேரத்திலும்
துணையாக நின்றவரே
உளையான சேற்றில் நின்று
என்னை தூக்கி எடுத்தவர் நீரே
உந்தன் மாறா அன்புக்கீடாய்
வேறொன்றும் இல்லையே
துன்பம் சூழ்ந்த வேளையிலும்
இன்பமாக வந்தவரே
தொல்லை கஷ்டங்கள் மத்தியிலும்
உம்மை துதிக்க செய்தவரே
ஜீவனுள்ள காலம் உந்தன்
நன்மை கிருபை தொடரும் என்றீர்
எந்தன் வாழ் நாளெல்லாம் உந்தன் நாமம்
பாடி மகிமைப்படுத்துவேன்-கன்மலையே
Details
- Numeric ID
- 5664
- Song ID
- kanmalaye-karthavae-johnsam-joyson
- Views
- 1
- Downloads
- 1