Lyrics
கண்மணி போல் காப்பவரே
கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா - 2
காரிருளில் தீபம் நீரே
கடும் வெயிலில் நிழலும் நீரே-2
1)உம்மையன்றி வேறே விருப்பமில்லை,
உம்மையன்றி யாரும் துணையுமில்லை,
என் தேவனே என் தேவனே,
அடைக்கலம் உம்மையன்றி யாருமில்லை.
2)பெற்றவர்கள் என்னை மறந்தாலும் சொந்தமானவர் எல்லாம் வெறுத்தாலும்
சொந்த இரத்தம் சிந்தியே எந்தனையே
சொந்தமாக்கி கொண்டவரே
3)மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்த நேரங்களில்
கோலும் தடியும் கொண்டுத் தேற்றினீரே
கொல்கதா நாயகனே-எந்தன்
4)உமக்காக பாடுகள் சகித்திடுவேன்
உமக்காக ஜீவனையும் கொடுத்திடுவேன்
உமக்காக யாவையும் இழந்திடுவேன்
உம்மோடு வாழ்ந்து நான் பறந்திடுவேன்
5)நிலையற்ற உலக இன்பங்களை
வெறுத்து உம்மோடு நடந்திடுவேன்
மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
மன்னவா உம்மோடு வாழ்ந்திடுவேன்.
Details
- Numeric ID
- 2828
- Song ID
- kanmani-pol-kaappavar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0