Lyrics
கண்ணீரைக் காண்பவர் ஏசு – உன்
விண்ணப்பம் கேட்பவர் ஏசு
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்
கர்த்தர் உன்னைவிட்டு விலகவே மாட்டார்
மனம் கலங்காதே சோர்ந்து போகாதே
தினம் ஜெபம் செய்வாய் திடமனதாய்
1. அற்ப விசுவாசம் அகற்றிடுவாயே
ஆண்டவர் அதிசயம் உனக்கு செய்வாரே
கிருபையும் நன்மையும் உன்னைத் தொடரும்
கர்த்தரோ நல்லவர் கவலைப்படாதே
2. ஏன் இந்த சோதனை எனக்கு வந்ததென்று
ஏசுவை கேள்விகள் கேட்டிடாதே நீ
பொன்னைப் போல் உன்னையும் புடமிட்டபோதும்
பசும்பொன்னாய் மாற்றுவார் பொறுமையாய் காத்திரு
3. ஆபத்துக் காலத்தில் பொருத்தனை துதிசெய்
ஆண்டவர் நாமத்தை மகிமைப்படுத்துவாய்
கூப்பிடும் எளியோன் சிறுமைப்பட்டோனை
கர்த்தரே விடுவிப்பார் சாட்சி நீ கூறுவாய்
Details
- Numeric ID
- 654
- Song ID
- kanneera-kaanbavar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0