Lyrics
கண்ணீரின் பள்ளத்தில் (பாதையில்) நின்று
கர்த்தாவே கர்த்தாவே என்று
கண்ணீரை துடைப்போனை நோக்கி
கதறி நான் அழுதிடுவேன் – 2
தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
ஒளித்தென்னை வைத்து காக்கும் நல் தேவன்
ஒருபோதும் கைவிடாரே
ஒருநாளும் மறந்திடாரே – 2
என் பார சுமைகள் என் மன வேதனைகள்
யாரிடம் நான் இறக்கி வைப்பேன்
கர்த்தர் மேல் பாரம் வைப்பேன்
அவரே என்னை ஆதரிப்பார் – 2
அழுகையின் பள்ளம் கலங்கும் என் உள்ளம்
பெலனில்லை தேவா பலப்படுத்தும்
தேவா நான் கலங்குகிறேன்
தேற்றிட வாருமையா
Details
- Numeric ID
- 2832
- Song ID
- kanneerin-pallathil-nentru-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0