Lyrics
கண்ணீரைத் துடைப்பவர்
கதவண்டை இருக்கிறார்
கலங்காதே நெஞ்சம் பதறாதே
நீ இடைவிடாமல் உந்தன் தேவனை
நம்பிக்கொண்டிரு-மகஸேனே -2
1. உளையான சேற்றிலிருந்து
உன்னைத் தூக்கி எடுத்தவர்
ஒருபோதும் உன்னை
என்றும் கைவிடாதவர்
உன்னோடு இருக்கிறார்
உன்னை என்றும் நடத்துவார்
உன் சார்பில் நின்றே
அவர் செயலாற்றுவார் -2
2. அன்னாளின் கண்ணீரைத் துடைத்திட்ட
அன்பின் நேசர்
சாமுவேலை பரிசாகத் தந்த ஆண்டவர்
உன் நெஞ்சின் ஆசைகள்
இதய ஏக்கங்கள் அறிவாரே
அற்புதங்கள் செய்திடுவாரே
3. பாலைவனப் பாதைகளில்
மன்னாவைப் பொழிந்தவர்
கற்பாறை நீரூற்றால் தாகம் தீர்த்தவர்
எரிகோவை வீழ்த்தி
ஜெயத்தைக் கொடுத்தவர்
உனக்கொன்றும் செய்திடாமல்
கைவிடுவாரோ
Details
- Numeric ID
- 1739
- Song ID
- kannerai-thudaippavar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0